Saturday 30 July 2011

கற்றாழையின் பயன்கள் :

       
கற்றாழையின் பயன்கள் :
           













பயன்படுத்தும் முறைகள்:
தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும்.அடுத்து என்ன கேக்கரிங்கனு புரியுது!!ஏன் கழுவனும்தானே...கற்றாழை சோற்றில்Aloin என்ற வேதிப்பொருள் இருக்குங்க, கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுமுங்க!! 

மருத்துவ பயன்கள்;
1. கற்றாளை சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
2. குமரி பூச்சு - அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.
3. குமரி களிம்பு - முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும்  நான் சேருகிறேன். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.
4. குமரி பக்குவம் - இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.
5. குமரி எண்ணெய் - என்னுடைய சோற்றை,எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி,தலைக்கு தேய்த்து வர முடி  நன்றாக கருமையாக வளரும்.தூக்கம் சிறப்பாக வரும்.
6.என்னைக்கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும்.


மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை!.


        மருத்துவக் குணங்கள்
1.       கற்றாழை ஜெல்லை (சோறுசுத்தமான நீரில் 7 முறைகழுவி சுத்தம் செய்து,
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள்இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2.             உடலில் கஸ்தூரி மணம் வீசும்சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3.         கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள்வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.
4.          இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால்முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5.         கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்துஅதை தேங்காய்எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதைதலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள்தலைமுடி நன்குசெழித்து வளரும்   
6.          .காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம்சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்உடல்பருக்காமலே.பலகீனம் மறையும்   தாதுவிருத்தி ஏற்படும்.பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;

7.     சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமானஅளவுகளில்காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்வயிறுதொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .

.
8.     கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்புநீர்தாரைஎரிச்சல்மாதவிடாய் கோளாறுகள்உடல் வெப்பம்உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்குசோற்றுக் கற்றாழைஉள்ள நுங்கு (சோறுபோன்ற சதையை எடுத்து சுத்தமானநீரில் அலசிக் கொள்ள வேண்டும்பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை,மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.இதனால் உடல் உஷ்ணமும்எரிச்சலும் குறையும்.
9.     வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகிகண்கள் சிவந்து விடும்அப்போது,கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்துகண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும்இப்போது கண் எரிச்சல்குறைவதோடுசிவந்தநிறமும் மறைந்து விடும்.
10.       இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடுஉடலுக்கு பலநன்மைகளும் கிடைக்கும்.
11.    சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில்நெருப்பை மிதித்ததுபோலஎரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம்பாத எரிச்சல் குறைவதோடுபாதவெடிப்புகளும் குணமாகும்.
12.   சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத்தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும்எரிச்சலும் குறைந்துஉடல் குளிர்ச்சியடையும்உடலில் எந்தப் பிரச்சினையும்இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத்தடவி வரலாம்.
13.  வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத்தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைஏற்படுவதோடுஉடல் வனப்பும் ஏற்படும்இந்த சோற்றுக்கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயேதயாரிக்கலாம்.
14.  சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ,விளக்கெண்ணெய் 1 கிலோபனங்கற்கண்டு அரை கிலோ,வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக்கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிஇரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம்,வயிற்று வலிபசியின்மைகுன்மக் கட்டிரணம்,புளியேப்பம்பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்தமலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15.    செரிமான சக்தியை அதிகரிக்கும்பசியை உண்டாக்கும்.



16.  இதுமட்டும் ல்லாமல் பெரும் ஏப்பம்பசியின்மை,குன்மம்தண்டு வலிவயிற்றுப் பொருமல்அடிவயிறுவீக்கம்மலச்சிக்கல்நரம்புச் சூடு தணியும்.
17.  இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளைகுடித்து காரம்புளி உள்ள உணவு வகைகளை நீக்கிசாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18.  எரிச்சல்நீர்க்கசியும் கிரந்திஅரிப்புதினவுமஞ்சள் மற்றும்சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல்தாது இழப்புஅரையாப்பு,தொடைக்கட்டிஅக மற்றும் புற உறுப்புகளில் உள்ளஇரணங்கள்சீழ் வடிதல்மலச்சிக்கல்குணமாகும்.வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக்குணமாகும்மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும்,புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19.  வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்குஇடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால்மூட்டுவலி ஏற்படுகிறதுஇவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்தமுடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.



மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த்டிரிங்க்உதவும்.

     இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில்குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள்சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்றதிரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில்மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லாவகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம்அளிக்கிறது.

     20)  இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின்     தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான்இதன்சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்  சர்மநோய்களையும் குணப்படுத்துகிறது.

21) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள்உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிதுகற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து  காலையில்வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.

   22)தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
  23) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாககற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியதுவைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறுசருமத்திலுள்ளகொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன்கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
      மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவைஒழுங்குபடுத்தும்கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்துஇதில் சிறிதுபடிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும்இதில்வெண்ணெய்கற்கண்டுவால் மிளகுத் தூள் சேர்த்து,சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம்மேக நோயால் ஏற்பட்டவெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்தசோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்து  கொண்டுஇதில்சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்துவிளக்கெண்ணெய் 300 கிராம்பனங்கற்கண்டு 300 கிராம் இவையாவையும் ஒன்று சேர்த்து  அடுப்பில் வைத்து சிறு தீயாகலேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை,மாலைஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்துவகையான வயிற்று வலியும்வயிற்றுப் புண்களும்குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்தசோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத்துண்டுகளை நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும்மடல்துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை,காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும்மூன்று நாள்உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்றுவிடும்இதே முறையில்மூன்று தினங்கள் சாப்பிட்டால்நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்கழுவிச் சுத்தம் செய்தகற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டுஇதில் சின்னவெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக்குறையாமல் சேர்த்துக் கொண்டுஇந்த கற்றாழைச் சோற்றில்கலந்துகடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து,எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடிவத்தால்கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும்.இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணிநேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும்தாராளமாக சிறுநீர்வெளியேறிவிடும்.


புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம்பசும் பாலில் கலந்து காலைமாலை சாப்பிட்டு வந்தால் பத்துதினங்களில் மூலச் சூடு தணியும்சொறிஅரிப்பு நீங்கும்.விந்து உற்பத்தி அதிகரிக்கும் 
பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழைமடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்றுதேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடிநூலால் கட்டிஇரவு கூரைமேல் வைத்து எடுத்தால்மூன்றாவது நாளில்பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும்.இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள்சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளை நோய்குணமாகும்.

கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின்சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துஇதில்சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால்சோற்றுப்பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்இந்த நீருக்குச்சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்துநீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டுதினசரிதலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்நல்லதூக்கம் வரும்
..கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோஇதரகாரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச்சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்.மூன்று தினங்களில் நோய் குணமாகும்கற்றாழைச் சோற்றில் சிறிதுபடிக்காரத்தூள் சேர்த்துஒரு துணியில் முடிச்சுக் கட்டிதொங்கவிட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்துஎடுத்துக்கொண்டுஇதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டுவந்தால்கண்நோய்கள்கண்களில் அரிப்புகண் சிவப்பு மாறும்.குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய்தயாரிக்கசோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோதயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்எண்ணெய்பசுமை நிறமாக மாறிவிடும்இதில் தேவையான வாசனையைக்கலந்து வைத்துக் கொண்டுகுளியலுக்குப் பயன்படுத்தினால்குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.



ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைபயன்படுத்தலாம்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கருப்பிடவும்  கேசத்தின்வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறதுதலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை  நீக்குகிறதுதோல் இறுக்கத்திற்கு  சுகமளிக்கும் மருந்தாகிறது    சோற்றுக் கற்றாழை  சோற்றை  எடுத்து  எண்ணெயிலிட்டுக் காய்ச்சித்தலைமுழுகி  வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.



தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களைவெட்டிசிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்துஇட்லிப்பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால்ஆவியில் வேகவைத்து எடுத்துநன்கு காயவைத்துப் பொடி செய்துவைத்க்து கொண்டுதினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்துசாப்பிட்டு வந்தால்தாம்பத்திய உறவு மேம்படும்தாம்பத்தியஉறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்துதயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச்செயல்படுகிறதுசருமத்தின் ஈரப் பசையைப் பாதுகாக்கிறது .சருமநோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது.